ஒரு நேர்காணலில் தவெகவை ஆதரிக்கும் பெண் தொண்டர்கள் மற்றும் ரசிகைகளை விமர்சிக்கும் வகையில் பொன்ராஜ் பேசினார். “புருஷன் எனக்குத் தேவையில்லை. எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம். அண்ணாவாக இருந்தாலும், தங்கையாகவும் இருப்போம், அக்காவாகவும் இருப்போம், பெண்டாட்டியாகவும் இருப்போம் என்று விபச்சாரிகள் நிறைந்த, ரசிகைகள் நிறைந்த தற்குறி கூட்டம் இருக்கிறது” என்பது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.
அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சிந்தனை எல்லாம் சாக்கடை., வார்த்தைகளில் எல்லாம் வன்ம நாற்றம்., தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து பொன்ராஜ் வெளியிட்டிருக்கும் காழ்ப்புணர்வுக்கு வன்மையான கண்டனங்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு குழு செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த பெண்ணினத்தையே கொச்சைப்படுத்தும் இவர்தான் சமூக நீதி பற்றியும், கல்வி பற்றியும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார் என்பது வெட்கக்கேடு என்று கூறினார். அகிலம் போற்றும் அப்துல் கலாமிடமிருந்து இவர் கற்றுக் கொண்டது என்ன என்றும் அவர் பெயரை வைத்து இவர் அடைந்தது என்ன எனவும் கேள்வி எழுப்பினார். திமுக விட்டெறியும் சில்லரைகளுக்காக வரம்பு மீறி பேசியது பற்றி பலர் சுட்டிக்காட்டியும் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது இறுமாப்பின் உச்சநிலை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: செம்ம அப்செட்... பதவியை பறித்த காங்கிரஸ்...! தவெகவில் இணையும் டி.செல்வம்..!!
அப்துல் கலாமின் ஆத்மா நிச்சயம் உங்களை மன்னிக்காது என்றும் இப்பொழுதாவது உங்கள் தவறை உணர்ந்து தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கோரி இனி வரும் காலங்களில் சில்லரைகளுக்கு விலை போகாமல் கௌரவமாக வாழ பாருங்கள் எனவும் தெரிவித்தார். இல்லையேல் சமுதாயத்தில் கீழ்த்தரமான எடுத்துக்காட்டுகளில் ஒருவராகத் தான் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: இன்னும் 2 நாட்கள் தான்... இதுவரை எடுக்காத ரிஸ்க்கை கையில் எடுத்த விஜய்... ஆடிப்போன அரசியல் களம்...!