இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் யாசகர்களை மீட்கும் திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி! தெருவில் பிச்சை எடுத்து வாழ்வதாகத் தோன்றிய ஒரு யாசகரிடம் கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2024 பிப்ரவரி முதல் இந்தூரில் தெருவோர யாசகர்களை மீட்டு அவர்களுக்கு கண்ணியமான வாழ்வு அளிக்கும் திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த திட்டத்தில் ஒரு யாசகரை மீட்கும் போது அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.
அந்த யாசகரின் பெயர் மங்கிலால். தற்போது அல்வாசா பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். யாசகம் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்தூரின் பகத் சிங் நகர், ஷிவ் நகர் மற்றும் அல்வாசா ஆகிய இடங்களில் மூன்று வீடுகளை வாங்கியுள்ளார்.
இதையும் படிங்க: நோபல் பரிசு கிடைக்கலையே! அமைதி பத்தி எனக்கென்ன கவலை! சுயரூபத்தை காட்ட் ஆரம்பித்த ட்ரம்ப்!! போர் பதற்றம்!
அதில் ஒரு வீடு மூன்று அடுக்குமாடி கொண்டது. இதுதவிர, மூன்று ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகிறார். மாருதி சுசூகி டிசைர் காரும் அவருக்கு சொந்தமானது – அதையும் வாடகைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்.
மேலும், இந்தூரின் சராபஸா பஜாரில் சிறு நகை வியாபாரிகளுக்கு ரகசியமாக வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். தினசரி அல்லது வாரந்தோறும் வட்டி பணத்தை வசூலித்து வருகிறார். ஆனால் யாசகம் செய்வதை இன்னும் விடவில்லை.
அதிகாரிகள் தற்போது மங்கிலாலின் வங்கிக் கணக்குகள், கையிருப்பு பணம், வட்டி வருமானம், ஆட்டோ-கார் வாடகை வருமானம் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், ஏற்கனவே மூன்று வீடுகள் இருந்தும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மற்றொரு வீட்டை கட்டி முடித்திருப்பது தான். இது அதிகாரிகளை வாய் பிளக்க வைத்துள்ளது.
விரைவில் மங்கிலாலை கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தி, அரசு வீடு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த இரு ஆண்டுகளாக இந்தூரில் மட்டும் 6,500 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4,500 பேருக்கு மாநில அரசின் திட்டங்கள் மூலம் கண்ணியமான வாழ்வு அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 1,500 பேர் உஜ்ஜைன் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
யாசகம் செய்து கோடீஸ்வரனாக மாறிய மங்கிலால் கதை தமிழகத்திலும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எத்தனை இருக்கும் என்பது தெரியவில்லை!
இதையும் படிங்க: வழக்கம்போல் LIVE CUT..! திமுக மிரண்டு போய் இருக்கு..! அதிமுக கடும் விமர்சனம்..!