பிரபல திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த தமிழ் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான பாக்கியராஜ் மறைவு திரை உலகிற்கு பேரிழப்பு என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாக்யராஜின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார். பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கூறினார்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ் என்றும் “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார் எனவும் தெரிவித்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட உலகில் குடும்ப பாசம், சமூக மதிப்புகளை வலியுறுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்! அதிமுகவில் புது ப்ளான்! மாஜிக்களுக்கு மீண்டும் பதவி!
We the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான பாக்கியராஜ் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று தெரிவித்தார். தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர் என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தனித்துவமான முத்திரை பதித்த அவரது மறைவு, தமிழ்த் திரையுலகிற்கும், கலை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!