டெல்லி அரசியலில் பெரும் அதிர்ச்சி! டெல்லி மதுபான கொள்கை (Excise Policy) முறைகேடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27, 2026) இந்த தீர்ப்பை அறிவித்தது. நீதிபதி ஜிதேந்திர சிங் தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் CBI தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்து, அனைவரையும் விடுவித்தது.
2021-22 ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் (Delhi Excise Policy 2021-22) ஊழல், லஞ்சம், குறிப்பாக தென்னிந்திய லாபி மூலம் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக CBI குற்றம் சாட்டியது.
இதையும் படிங்க: உங்க வாயால அந்த வார்த்தையா? கொச்சைப்படுத்திடீங்க ஓபிஎஸ்..! தமிழிசை ஆதங்கம்..!!
இதன்பேரில் கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். ED தனியாக வழக்கு நடத்தியது, CBI தனியாக விசாரித்தது.
நீதிமன்றம் தீர்ப்பில், "குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சதி (criminal conspiracy) அல்லது குற்ற எண்ணம் (criminal intent) நிரூபிக்கப்படவில்லை.

வழக்கு தொடர போதிய பிரதம ஆதாரங்கள் இல்லை" என கூறியது. CBIயின் குற்றப்பத்திரிகையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும், கெஜ்ரிவால், சிசோடியா போன்றோர் மீதான குற்றச்சாட்டுகள் "நீதித்துறை ஆய்வில் தோல்வியடைந்தன" எனவும் தெரிவித்தது.
தீர்ப்புக்குப் பிறகு கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். "நான் ஊழல்வாதி இல்லை. நீதிமன்றம் கெஜ்ரிவாலும் சிசோடியாவும் நேர்மையானவர்கள் என கூறியுள்ளது. உண்மை எப்போதும் வெல்லும்" என கூறினார். அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் "உண்மை வென்றது" என ட்வீட் செய்தார். AAP தரப்பில் இது பெரும் வெற்றியாக கொண்டாடப்படுகிறது.
இந்த வழக்கு AAP-க்கு எதிரான அரசியல் சதி என கட்சி குற்றம்சாட்டியது. ED வழக்குகளில் ஏற்கெனவே சிலவற்றில் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்ட நிலையில், CBI வழக்கிலும் இந்த தீர்ப்பு AAP-க்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. டெல்லி அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CBIயின் விசாரணை மீது கேள்வி எழுந்துள்ளது.
இந்த தீர்ப்பு டெல்லி அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. AAP தலைமை இதை "நேர்மைக்கான வெற்றி" என கொண்டாடுகிறது!
இதையும் படிங்க: 3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!