தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழர் பண்பாடு என்பது, நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று, பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம்., அந்த மகத்தான செல்வத்தை, இன்று பொழுதுபோக்கு என்றப் பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான், பிக் பாஸ் நிகழ்ச்சி என்று கூறினார். தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து, சீரழிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது என்றும் இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு., தமிழர் பண்பாட்டையும், குடும்ப அமைப்பையும் குலைக்கும் நச்சு நிகழ்ச்சி என்று தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றன என்றும் இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு வெறுப்பையும், வன்முறையையும், தனிமனித மோதல்களையும் மட்டுமே வாழும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறது எனவும் தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள், விதிமீறல்கள், மற்றும் சமூக எதிர்ப்புகளை எழுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழி பிறவி இல்ல” - செல்லூர் ராஜூ ஆவேசம்...!
தமிழக அரசு, தமிழ் மரபையும் , எதிர்காலச் சந்ததியையும், காக்கும் கடமையின் அடிப்படையில், உடனடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும் என்றும், தமிழ் ஊடகங்களில் பண்பாட்டு மதிப்புகள் நிலைத்திருக்க, Cable Television Regulation Act, 1995 மற்றும் Program Code விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: என்ன நடந்துச்சு? யார்கிட்ட வீடியோ இருக்கு? தவெக மா. செ.களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை