பாஜக மாநில வர்த்தக அணி தலைவரும் செய்தி தொடர்பாளருமான கிருஷ்ணகிரியை சேர்ந்த நரசிம்மன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நரசிம்மன் பாஜகவில் அணைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இருந்து விலகி தற்போது அண்ணாமலை அன்பு கூட்டத்தில் இணைய உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராக மாற்று அரசியலை அண்ணாமலையால் மட்டும் தான் கொண்டுவர முடியும் எனவும் கூறினார், மேலும் அண்ணாமலையின் அரசியல் பாஜக.,விற்கு எதிராக இல்லை, பாஜகவிற்கு எதிராக எப்போது செயல்படாது எனவும் தெரிவித்தார்.
மேலும் சமீப காலமாக பாஜக தலைவர் செயல்பாடு தங்களுக்கு திருப்திகரமாக இல்லை என்றும், தேர்தலுக்கு முன்பிருந்தே இது போன்ற மனநிலையில் தான் இருந்தோம்., ஆனால் தேர்தலின் போது எதுவும் பேச வேண்டாம் என இருந்து விட்டோம்.. தற்பொழுது அதிலிருந்து வெளியேறி அண்ணாமலை துவங்கியயுள்ள அமைப்பில் இனைந்துள்ளோம்.. அதில் எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.. அதற்காக பாஜக.,வில் இருந்து அனைத்து பொறுப்புகளையும் துறந்துள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: "தூய சக்திக்கு அர்த்தம் தெரியுமா விஜய்"..? திமுகவின் நீட்சியே தவெக... வெளுத்துவிட்ட H. ராஜா..!!
மேலும் இன்னும் சில நாட்களில் கிருஷ்ணகிரியில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் இணைந்து அண்ணாமலையை சந்தித்து இயக்கத்தில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார். இவருடன் கிழக்கு மாவட்ட பாஜகவில் உள்ள பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "WE THE LEADERS"...! எல்லாரும் ஒன்னு சேரலாம்..!! அண்ணாமலை அழைப்பு..!!