கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2014 முதல் மூன்று கட்ட அகழாய்வை நடத்தியது. இதில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், வாழ்விடங்கள், தொழிற்சாலைகள், விலங்குகளின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
அதன்பின் தமிழக தொல்லியல் துறை கீழடியுடன் அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வை நடத்தியது. ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும், அதன்பின் ஒன்பது மாத அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்து மத்திய தொல்லியல் துறையின் காபா அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அடுத்த கட்ட அகழாய்வு குறித்தும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்தும் தமிழக அரசு விண்ணப்பிக்கும், அதற்கு ஏற்ப அனுமதி கிடைத்த உடன் தமிழக அரசு நிதி ஒதுக்கி அகழாய்வு பணிகள் தொடங்கும், கடந்தாண்டு திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடந்ததால் அகழாய்வு நடைபெறவில்லை.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!
10ம் கட்ட அகழாய்வு பணிகள் 2024 ஜூன் 18ல் தொடங்கி 2025 ஜூலை வரை 11 குழிகள் தோண்டப்பட்டு பானைகள், பாசி மணிகள், செங்கல் கட்டுமானம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தமிழக தொல்லியல் துறை கடந்தாண்டு ஜூலையில் அறிக்கை சமர்ப்பித்து 11ம் கட்ட அகழாய்விற்கு விண்ணப்பித்தது. தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. மார்ச்சில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!