மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம் அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் கருப்புக் கொடி ஏற்றி கோஷமிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். “அமெரிக்கா-இஸ்ரேலுக்கு மரணம்”, “கமேனி கொலைக்கு நீதி வேண்டும்” என்ற கோஷங்கள் வானத்தை அதிரச் செய்தன. போலீஸ் பலத்த பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். “பாகிஸ்தான் ஆதரவுடன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டபோது, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தெருவில் இறங்கி போராடவில்லை. சதிகாரர்களை கண்டிக்கவில்லை.
இதையும் படிங்க: தனி சின்னத்தில் போட்டியிட்டா 3 தொகுதிதான்!! கறார் காட்டும் திமுக!! வைகோ அப்செட்!

ஆனால் நேற்று சென்னையில் முழு போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்படிப்பட்ட பாதுகாப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்லது பொதுமக்கள் போராடும்போது அரிதாகவே கிடைக்கிறது. ஆனால் எதிர்ப்பு குரல் எழுப்பும் போது மட்டும் போலீசார் சரியாக வந்து கைது செய்து விடுவார்கள்” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “திமுகவை பொறுத்தவரை ஒரு சாராரை திருப்திப்படுத்தும் அரசியலுக்குத்தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நேற்றைய சம்பவம் அதை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது” என்று அண்ணாமலை கூறியுள்ளார். இந்த அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. யுஏஇ, சவுதி போன்ற நாடுகளில் உள்ள 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது. சென்னை ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் மத அடிப்படையிலான பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அரசியல் கட்சிகள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?