தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சமூக நீதி மற்றும் மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் திரு. ச. ஜோசப் விஜய் பல்வேறு இடங்களுக்கு திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூக நீதி விடுதியை (முன்பு எம்.சி. ராஜா மாணவர் விடுதி என்று அழைக்கப்பட்டது) அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த விடுதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான முக்கியமான கல்வி வளாகமாக விளங்குகிறது. பழைய கட்டிடத்துடன் இணைந்து சமீபத்தில் 10 மாடி புதிய கட்டிடம் கட்டப்பட்டு, நவீன வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. நூலகம், படிப்பறைகள், உடற்பயிற்சி கூடங்கள், உள் விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இங்கு உள்ளன. மாணவர்களின் தங்கும் வசதிக்கு ஏற்ப ஏராளமான அறைகள், உணவு மற்றும் சுகாதார வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய் இங்கு வருகை தந்தபோது, விடுதியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை உன்னிப்பாகப் பார்வையிட்டார். மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்சினைகள், உணவு தரம், குடிநீர் வசதி, பாதுகாப்பு மற்றும் கல்வி உதவிகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார். அதிகாரிகளிடம் விடுதியின் பராமரிப்பு, மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி விரிவான விவாதம் நடத்தினார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
சில இடங்களில் தானே சோதனை செய்து பார்த்து, தேவையான மேம்பாடுகளுக்கு உடனடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்த ஆய்வு மூலம், சமூக நீதி விடுதிகளை மாணவர்களுக்கு உண்மையான சமத்துவ வாய்ப்புகளை வழங்கும் இடங்களாக மாற்றும் அரசின் உறுதிப்பாட்டை முதல்வர் வலியுறுத்தினார். ஏழை, பின்தங்கிய பிரிவு மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலும் சூழலை உருவாக்குவது அரசின் முன்னுரிமை என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியது. விடுதியில் தங்கும் மாணவர்கள் முதல்வரின் வருகையால் உற்சாகமடைந்தனர்.
இதையும் படிங்க: விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??