இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று (10.08.2026) காலை 9:30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத் தொடரில், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவருகிறார்.
சமீபகாலமாகச் சில பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 1970-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை மற்றும் 2021-ஆம் ஆண்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாநிலப் பாடல் அந்தஸ்து வழங்கப்பட்ட அரசாணையை உறுதிப்படுத்தும் வகையில் இத் தனித் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும்.
இதையும் படிங்க: விஜய் 5 வருஷம் நினைச்சாலும் நல்ல பட்ஜெட் போட முடியாது! கரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேச்சு!
தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் இத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்மொழியும் இத் தனித் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஒருமனதான ஆதரவோடு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2026-27 நிதியாண்டின் பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் காரசார விவாதம் தொடரவுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!