மத்திய கிழக்கில் நான்காவது வாரமாகத் தொடரும் போர், அப்பகுதி முழுவதும் உயிர்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதால், முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக அமெரிக்காவும் ஈரானும் மாறி, மாறி அச்சுறுத்தியுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவோம் என்ற எச்சரிக்கை விடுத்ததை செயல்படுத்தினால், எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளுக்கு இன்றியமையாததான ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக நிரந்தரமாக மூடப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுத்தாக்குதலுக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்த் வருகிறது. ஈரான் உடன் கைகோர்த்து லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் வர்த்தகமும் ஸ்தம்பித்து உள்ளது. அனுமதி இல்லாமல் ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்வு போன்ற பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளன. இந்த சிக்கல்களை தீர்க்க வேண்டிய பொறுப்பு போரை ஆரம்பித்த அமெரிக்காவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்கவில்லை என்றால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஈரானின் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல் போக்குவரத்திற்கும் ஹோர்முஸ் நீர்வழி திறந்தே உள்ளது என்று ஐ.நா. கடல்சார் முகமைக்கான ஈரானின் பிரதிநிதி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்..! திருத்தணி முருகனை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்..!!
ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்கினால் மட்டுமே ஹோர்மூஸ் வழியாக கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும் ஹோர்மூஸ் ஜலசந்தி நிரந்தரமாக இழுத்து மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “தவறான அவதூறுகளை பரப்பக்கூடாதுன்னு...” - ரஜினி குறித்து ஆதவ் கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்..!!