இந்தியாவில், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மேற்கொள்கிறது. இந்தச் செயல்முறையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவது, மற்றும் பிழைகளைத் திருத்துவது ஆகியவை அடங்கும். இந்தத் திருத்தம் தேர்தல்களின் நேர்மையை உறுதி செய்ய முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2025-இல், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு முன்னெடுத்த பணிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தலித், மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் கூறப்படும் நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், தேர்தல் ஆணையம் பாஜகவின் செல்வாக்கின் கீழ் செயல்பட்டு, தலித்துகள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளால், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. அப்போது, பீகார் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில், பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடைபெறும் நிலையில், 52 லட்சம் மக்கள் வாக்குகள் குறைக்கப்படும் என காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜீவாலா கூறினார்.
இதையும் படிங்க: எதுக்காக அவசரம்? வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க MP மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!
ஆளும் மோடி அரசு விவாதம் செய்ய விடாமல் இருப்பதை பார்ப்பதாகவும் இது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும் சதியா என்றும் கேள்வி எழுப்பினார். மோடி அரசு நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது என்பதை இது காட்டுகிறது என்றும் இதைப் பற்றி மட்டுமே நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை பேசவே விடல.. இது என்ன பாரபட்சம்! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!