அதிமுக பாஜகவுடன் இணைந்த நாளிலே அதிமுக என்ற கட்சியை பாஜக முடித்து விட்டு இன்று அழிவு நிலைக்கு பாஜக உருவாக்கி வைத்துள்ளது. தங்கம் வாங்காதீர்கள், குழந்தைகளை ஆன்லைனில் படிக்க வையுங்கள் எனும் சொல்லும் மோடி நாளை அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள், பாதி சம்பளத்தை அரசாங்கத்திற்கு கொடுத்து விடுங்கள் என சொல்லுவார் என எம்பி சசிகாந்த் செந்தில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற மாநில கட்சிகளை அழிப்பதற்கு பாஜக முதலில் நிற்கிறது. விமானத்தில் பறக்காதீர்கள் தங்கம் வாங்காதீர்கள் என மோடி சொல்லிவிட்டு விமானத்தில் வெளிநாட்டுக்கு பறந்து விட்டார்
ராகுல் காந்தியை வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதி ஆதாரங்களை காட்ட வேண்டும் என கூறும் பாஜகவினர் மோடி வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முதலில் காட்ட வேண்டும். கொள்கை பிடிப்பில் இருந்து மாறாமல் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைத்து உள்ளது. தமிழக மக்களுக்கு அந்த நேரத்தில் எது செய்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்துள்ளது
இதையும் படிங்க: "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!
காங்கிரஸ் மீது விமர்சனம் வைக்கும் அகிலேஷ் யாதவ் போன்ற கட்சித் தலைவர்கள் அவர்களுடைய அரசியல் வரலாறு ரீதியாக திரும்பிப் பார்த்தால் புரியவரும், ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் போர் ட்ரம்ப் அவருடைய நண்பர் மோடியால் உருவாக்கப்பட்ட செயற்கை போர். அத்தகைய போர் நிற்கவில்லை என்றால் மக்கள் எரிவாயு பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுவார்கள். வரப்போகிற பெரிய அழிவின் ஆரம்பமாக தோன்றுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயரம் என நினைத்து மக்கள் வதந்திகளை நம்பாமல் பொருட்களை வாங்கி வைத்து பதுக்காமல் இருக்க வேண்டும்
மத்திய அரசின் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை கசிவு இல்லாமல் நடத்த முடியாது. நீட் குளறுபடியால் தமிழகத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்பட அபாயம் உள்ளது எல்லாத்தையும் தன் கீழ் வைத்து இருக்க வேண்டும் என்று வெறி இல்லாமல் எது இந்த நாட்டிற்கு வேலை செய்ய முடியும் என்பதை தெரிந்து வேலை செய்வது முக்கியம்
நீட் தேர்வு மிகப்பெரிய மோசடி.வினாத்தாளை காப்பாற்ற முடியாமல் இருக்கும் நிலை உள்ளது.நீட் தேர்வை ஆன்லைனில் கொண்டு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் எழுத முடியாத சூழல் உருவாகும். ஐஐடி ,ஜெஇஇ நுழைவுத் தேர்வு
எல்லாம் ஆன்லைனில் கொண்டு வந்து மேல் தட்ட மக்களுக்காகவே கல்லூரியை மாற்றி விட்டார்கள்,
ஆன்லைன் நுழைவுத் தேர்வு மாற்றி இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் எல்லாம் ஜேஇஇ படிக்க நினைக்காது.மருத்துவம் என்பது ஒவ்வொரு கிராமப்புற மாணவர்களின் கனவாக உள்ளது. நீட் தேர்வை ஆன்லைனில் கொண்டு வந்தால் தேர்வுக்கு பயந்து கிராமப்புற மாணவர்கள் விட்டுவிடுவார்கள்
5 வருடத்திற்கு பிறகு மருத்துவம் மேல் தட்டு மக்கள் தான் படிக்க முடியும் சூழல் உருவாகும். வையெல்லாம் வேண்டும் என்று உருவாக்கக்கூடிய ஃபில்டர். நுழைவுத் தேர்வு கொண்டு வந்து எளிய மக்களை படிப்பிலிருந்து விரட்டும் சூழ்ச்சியாக பார்க்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!