தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீண்டகாலமாக நிலைத்திருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கணிசமான மாற்றத்தைச் சந்தித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்த சூழல், தமிழ்நாட்டு அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக தலைமையிலான கூட்டணியில் CPIக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2021 தேர்தலில் ஆறு தொகுதிகள் பெற்றிருந்த CPI, இம்முறை குறைந்த இடங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளின்போது இடதுசாரி கட்சிகள் அதிக இடங்கள் கோரினாலும், திமுக அதை ஏற்கவில்லை. இருப்பினும், பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்கும் பொது இலக்குடன் CPI உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடர்ந்தன. தேர்தல் முடிவுகளில் தவெக 108 இடங்களுடன் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக அரசுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தன. இது திமுக கூட்டணியின் அடித்தளத்தையே பாதித்தது. CPI பொதுச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட தலைவர்கள், தவெகவுடன் தொடர்பு கொண்டதில் திமுக தரப்பு அதிருப்தி அடைந்ததாகக் கூறினர். மறுபுறம், திமுக தரப்பு அதிமுகவுடன் சில புரிந்துணர்வுகளை விரும்பியதாக இடதுசாரி தலைவர்கள் குற்றம் சாட்டினர். இத்தகைய முரண்பாடுகள் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு வளர்ந்தன.
இதையும் படிங்க: கொள்கை, கத்திரிக்காய் ஒன்னும் இல்ல... தவெக தொப்புள் கொடி அறுக்காத குழந்தை..! சிபிஐ முத்தரசன் விமர்சனம்..!!
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொடரும் சூழல் இல்லை என்றும் இதைவிட ஆழமாக எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: யாருடைய பினாமி அண்ணாமலை?! யாருக்காக இயக்கம் துவக்கம்?! முத்தரசன் விளாசல்!