நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்குகிறது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஏற்கனவே, தனி நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. படத்தில் ராணுவம் தொடர்பான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து ஒரு உறுப்பினர் புகார் அளித்ததால், படத்தை 9 பேர் கொண்ட மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்பது வாரியத்தின் வாதமாக இருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜனவரி 20 அன்று இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டுத் தீர்ப்பைத் தள்ளிவைத்திருந்தது. இன்று காலை 10:30 மணியளவில் இந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட உள்ளது. ஏற்கனவே 27 இடங்களில் கட் செய்துவிட்டோம்; ஒரு தனிநபரின் புகாருக்காகப் பெரும்பான்மை முடிவை மாற்றக்கூடாது. இதனால் ₹500 கோடி முதலீடு முடங்கியுள்ளது. ஆயுதப் படைகள் குறித்த காட்சிகள் முறையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்; தணிக்கை விதிகளின்படி தலைவருக்கு மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப அதிகாரம் உள்ளது.
இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கு: ஜனவரி 27-ல் இறுதித் தீர்ப்பு!
இந்தத் தீர்ப்பு படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தீர்மானிக்கும் என்பதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, குடியரசு தின விடுமுறை வாரத்தில் படம் வெளியாகாதது ரசிகர்களுக்குப் ஏமாற்றத்தை அளித்த நிலையில், இன்றைய தீர்ப்பு ஒரு முக்கியத் திருப்பமாக அமையும்.
இதையும் படிங்க: நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!