டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செங்கோட்டையின் கேட் எண் 1 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள 8 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அருகிலுள்ள கடைகளும் குண்டுவெடிப்பில் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு... என்ன தான் நடக்குது? சாட்டையை சுழற்றும் அமித்ஷா...!
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்னதாக செங்கோட்டை ரயில் நிலையம் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கோட்டை மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் சந்தேகத்துடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் 13 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நடுங்க வைக்கும் டெல்லி கார் குண்டுவெடிப்பு...! உமரின் தாய், சகோதரர்கள் அதிரடி கைது...!