தருமபுரி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் போராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் செய்தியாளரை சந்தித்த ஜவாஹிருல்லா, கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். யாரும் மறக்க முடியாது . இன்றைய முதலமைச்சர் மறைமுகமாக தூத்துக்குடிக்கு சென்று இளம்பெண் ஸ்னோலின் குடும்பத்திற்கு மட்டும் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதி அரசர் அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த துப்பாக்கி சூட்டில் முக்கியமான குற்றவாளிகளில் ஒருவராக காவல்துறை அதிகாரி பட்டேலை குற்றச்சாட்டியது. அந்த அதிகாரி இன்று மதுரை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இந்த விசாரணை ஆணையத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்ட ஒருவரை தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான மாநகரின் ஆணையராக நியமிக்கப்பட்டதை தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மேகதாது அணை தொடர்பான பிரச்சினைக்கு தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். கடைமடை பகுதிகள் குறிப்பாக நாகப்பட்டிணம் பகுதிக்கு காவிரி நீர் இனிமே வராது என்ற நிலையில், மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுகிறது. ஏன் தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த பிரச்சனையில் முனைப்பு காட்ட வில்லை என்ற கேள்வி எழுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸில் ஆளுகிறது. தமிழ்நாட்டில் விஜய் அரசாங்கத்தில் காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளது. இந்த கரிசனம் காரணமாக காவிரி படுகை பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரம், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை பகுதி வறண்ட பூமியாக மாறும். இதை நிச்சயமாக தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும்.
இதையும் படிங்க: "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
அண்ணாமலை கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். இங்கு பாஜகவின் தலைவராக இருந்தார். பிறகு மாற்றப்பட்டார். இப்போது வேலையில்லா இளைஞராக இருக்கிறார். அதனால் இந்த வேலையை செய்கிறார். இது எல்லாம் ஒரு அரசியல் யுத்தியாக பரிணமிக்குமா? மக்களுக்கு நன்மை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேலையில்லா பட்டதாரி சங்கத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற நிகழ்வுகள் அன்றாட தலைப்புச் செய்திகளாக வரக்கூடியது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் குற்றங்கள் நடக்கும். ஆனால் குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் வேகம் புதிய அரசு தமிழகத்தில் பொறுப்பேற்ற பிறகு ராக்கெட் வேகத்தில் வருவது தான் அதிர்ச்சியளிக்க கூடியது.
குற்றம் செய்பவர்களுக்கு இந்த அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கை பாயும் என்ற நிலை இல்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த பல வாக்குறுதிகளை தவெக நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தாக 2500 கொடுக்கவில்லை. பதவியேற்ற உடனே கருவூலம் காலியாக இருக்கிறது. முன்பு இருந்த ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் துடைத்து விட்டு சென்றார்கள். இதை சரி பண்ணி தருவோம் என்றார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த கடுமையான அறிக்கைக்கு பிறகு மகளிர் உரிமை தொகுதி கொடுத்தார்கள். தாய்மாமன் சீர் எங்கு என்று திருமணமான பெண்கள் கேட்கிறார்கள். இதை எப்பொழுது கொடுப்பார்கள்.
.இந்தியா கூட்டணி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கூட்டணிக்கு பெயர் வைப்பது மட்டும்தான் இவர்களது வேலை. இந்த கூட்டணிக்கு பெயர் வைத்தது, அவர்கள் சொல்லி தான் எல்லாருக்கும் தெரியும். இந்த கூட்டணிக்கு தலைமை வைகிப்பது பிரவீன் சக்கரவர்த்தியா? அல்லது முதல்வர் விஜயா என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது தான் வேலை. இப்போதைக்கு அந்த கூட்டணிக்கு இங்கு வேலை இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வரின் பெருந்தன்மை..! வேட்பு மனுத் தாக்கல் செய்த பிரவீன் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..!!