தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு கோரிக்கை விவகாரம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்த 45 நிமிட சந்திப்பில், காங்கிரஸ் தரப்பு தங்கள் கோரிக்கையை வாபஸ் பெற்றதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது கூட்டணியின் உள் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். "ஆட்சியில் பங்கு வேண்டும்" என்ற காங்கிரஸின் கோரிக்கை இரு கட்சிகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியிருந்தது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
ஆலோசனை ஆரம்பத்தில் சற்று இறுக்கமாக இருந்தாலும், பின்னர் சுமூகமானது. தற்போதைய அரசியல் சூழல், வரும் தேர்தல்களில் கூட்டணி ஒற்றுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தங்கள் கோரிக்கையை தள்ளி வைத்துள்ளது. திமுக தரப்பில் ஆரம்பத்திலிருந்தே அதிகாரப் பகிர்வுக்கு உறுதியான எதிர்ப்பு இருந்தது. "கூட்டணி தர்மம் வேறு, அதிகாரம் வேறு" என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருந்தார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி? நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்?! அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் வேணுகோபால்!!

கள எதார்த்தத்தை வேணுகோபாலிடம் ஸ்டாலின் விளக்கியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்தது. "இப்போதைக்கு பவர் ஷேரிங் வேண்டாம், கூட்டணி பலம் முக்கியம்" என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடம் கலவையான கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அரசியல் நோக்கர்கள் இதை 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என பாராட்டுகின்றனர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு வேணுகோபால் முகத்தில் திருப்தியான புன்னகை தென்பட்டது. இது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளது.
நெட்டிசன்கள், "காங்கிரஸ் - திமுக நிர்வாகிகள் களத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சின்ன வருத்தங்கள் இருந்தாலும், பெரிய இலக்குக்காக இறங்கி வருவது மெச்சூரிட்டி" என கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பவர் ஷேரிங் கேட்காது, ஆனால் முன்பை விட அதிக தொகுதிகள் கேட்கும் என கதர் சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், 45 நிமிட சந்திப்பு பெரிய அரசியல் புயலை தடுத்து, கூட்டணியை காப்பாற்றியுள்ளது. திமுக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!