தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகம் நோக்கிய இணைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதிமுகவின் மீதான அதிருப்தியின் காரணமாக தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த இணைப்பு அதிமுகவுக்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
சி. விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர் ஆவார். எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் தொகுதியைச் சேர்ந்தவர். இருவரும் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், தங்கள் ஆதரவாளர்களுடன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.

தவெக ஆட்சியமைத்த பிறகு, கட்சியின் அமைப்பு வலுவடையும் வகையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து மட்டுமின்றி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் தவெகவில் சேர்ந்துள்ளனர். இந்த இணைப்புகள் தவெகவின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதுடன், எதிர்காலத் தேர்தல்களுக்கான தயாரிப்புகளை வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் இணைவது தவெகவுக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: சட்டமன்றம் எப்படி இருக்கனும் தெரியுமா?... சி.எம். விஜய்க்கு வகுப்பெடுத்த திமுக எம்.பி. கனிமொழி...!
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன் என்று தெரிவித்தார். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா? என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!