வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழகம் தலை குனியாது பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் முன்னாள் மேயர் கார்த்திகேயன் தலைமையில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி .டி . ஆர் .பழனிவேல் தியாகராஜன். வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார்.வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கதிர் ஆனந்த். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகமது சகி. மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: நம்முடைய பணியை பல திட்டங்களில் நாம் முதலிடத்தில் உள்ளோம் இதைப் பற்றி எல்லாம் பேசாமல் இவ்வளவு செய்தும் புதியதாக இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஒன்று கடன் மிகவும் அதிகமாக இருக்கிறது, இரண்டாவது ஊழல் பரவலாக இருக்கிறது என்கிறார்கள்.
பிரதமரின் ஆலோசகர் சுர்ஜித் வர்லா என்பவர் கூறுகிறார். இங்கு ஊழல் செய்வதால் வளர்ச்சி அடைந்து உள்ளீர்கள் என்று தவறான தகவலை தெரிவிக்கின்றார்.நான் அந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஆமாம் கடன் அதிகரித்து இருக்கிறது.
இதையும் படிங்க: நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!
ஆனால் அதனை ஒப்பிட்டு பார்க்கும்போது உற்பத்தி சதவிகிதம் எவ்வளவு அதிகரிக்கிறது. அப்படி பார்த்தால் நாம் ஆட்சிக்கு வந்து பார்த்தால் கடன் அதிகரிக்கவில்லை குறைந்து தான் உள்ளது. எப்பொழுது அதிகரித்தது என்றால், 2014 இல் உற்பத்தியில் கடன் வெறும் 16 சதவிகிதம் தான். 7 ஆண்டில் 2021 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது உற்பத்தியில்26 சதவிகிதம் கடனாக உயர்த்தியது அதிமுக அரசுதான் . அதை நாம் குறைதீர்க்க முடியும் ஆனால் இவ்வளவு நல திட்டங்களை செய்திருக்க முடியாது.
கடனை அதிகரித்தது அதிமுக அரசுதான் ஆனால் பொய்யான பிரச்சாரங்களை செய்கின்றனர். இந்தியாவிலே சிறந்த ஊழல் மாநிலம் என்றால் அது குஜராத் மாநிலம் தான். தென் மாநிலங்கள் சிறப்பாக வளர காரணம் ஊழல் செய்வதுதான் என மத்திய அரசு செல்கிறது. என் மாநிலங்கள் வளர்வதற்கான உரிய காரணம் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியில் அனைவருக்கும் சமூக நீதிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் திட்டம் வகுத்து பெண்களுக்கு முன்னுரிமை என நூறாண்டுகளுக்கு முன்பே வகுத்தது தான் இன்று தென்னிந்திய வளர காரணம்.
அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் எத்தனையோ வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆகையால் ஒரு அரசுக்கு திட்டம் தீட்டுவது நிதி மேலாண்மை செய்வது மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது எந்த அளவுக்கு முக்கியமோ சுயமரியாதை சமூகநீதி என்ற அடிப்படையில் உருவானஇந்த இயக்கத்தின் கொள்கைகளை தொடர்ந்து பாதுகாத்து ஆதிக்கவாதிகள் அவர்களின் அடிமைகள் இதை மாற்ற முயற்சி செய்யும்போது அதை தடுத்து நிறுத்தி அதனால் என்றைக்குமே தமிழ்நாடு தலை குனியாது என்று கூறுகிறோம். நீங்கள் எத்தனை முயற்சி எடுத்தாலும் எங்களுடைய கொள்கையில் நாங்கள் மாற மாட்டோம் என்று பேசினார்
இதையும் படிங்க: தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!