பேரறிஞர் அண்ணா 57வது நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ஆம் தேதி அமைதி பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. காஞ்சி தந்த காவியத் தலைவர் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிருக்கும் உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் பேரறிஞர் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் என்றும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் எனவும் புகழாரம் சூட்டியுள்ளது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன், சுயமரியாதை சுடரொளி, சொக்க வைக்கும் சொற்பொழிவாளர், எழுத்து வேந்தர் தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா இன்று திமுக தெரிவித்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளினையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் அனைவரும் இணைந்து பிப்ரவரி - 3, செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கையில் ரூ.100 கோடி செலவில் சட்டக் கல்லூரி... திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..!
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும் என்றும் அனைத்து அணியினரும் அண்ணாவின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருத்து சுதந்திரம் பறிப்பு..! முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம்..! சாடிய நயினார்..!