குஜராத் மாநிலத்தில் நீண்டகாலமாக வெளிவரும் “குஜராத்தி சமாச்சார்” நாளேட்டின் உரிமையாளர்களில் ஒருவரான பாகுபலி ஷாவை நேற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பாகுபலி ஷாவுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குஜராத்தில் ஒளிபரப்பாகும் ஜிஎஸ்டிவி சேனலின் உரிமையாளராகவும், லோக் பிகாஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்கநராகவும் பாகுபலி ஷா இருக்கிறார். இவரின் மூத்த சகோதரர் ஸ்ரேயான்ஷ் ஷா, நாளேட்டின் மேலாளர் இயக்குநராக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: அமலாக்கப்பிரிவுக்கு கைது அதிகாரம் இருக்கா..? 2 ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்..!
அகமதாபாத் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கே.எம். சோஜித்ரா, ரூ.10ஆயிரம் பிணையில் பாகுபலி ஷாவுக்கு இ்ம்மாதம் 31ம் தேதிவரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அமலாக்கப்பிரிவு ஜாமின் வழங்குவதில் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடல்நலன் குறித்து ஒவ்வொரு இருநாட்களுக்கு ஒருமுறையும் அறிக்கையை அமலாக்கப்பிரிவுக்கு பாகுபலி ஷா தெரிவிக்க வேண்டும், அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பாகுபலி ஷா எதற்காக கைது செய்யப்பட்டார், காரணம் என்ன என்பது குறித்து அமலாக்கப்பிரிவு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. முன்னதாக பாகுபலி ஷா இல்லத்தில் கடந்த 36மணிநேரமாக வருமானவரித்துறை சோதனையிட்டனர், அவர் புறப்படுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பாகுபலி ஷா இல்லத்துக்கு வந்து அவரை நேற்று இரவு 8 மணிக்கு கைது செய்தனர்.
குஜராத் எம்எல்ஏவும், காங்கிரஸ் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி அமலாக்கப்பிரிவு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் “ குஜராத் சமாச்சார் மற்றும் அதன் உரிமையாளர்கள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த நாளேடு கடந்த 25 ஆண்டுகளாக மத்திய அரசின் செயல்பாட்டினை நேர்மையாக விமர்சித்து வருகிறது முக்கியக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் சமாச்சார் நாளேட்டின் உரிமையாளர் பாகுபலி ஷா கைதுக்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இந்தியன் உமன் பிரஸ் கார்ப்ஸ், பிரஸ் அசோசியேஷன், டெல்லி யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், கேரளா யூனியன் ஆஃப் ஓர்க்கிங் ஜர்னலிஸ்ட்ஸ், ஓர்க்கிங் கேமிராமென் அசோசியேஷன் ஆகிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: அமைச்சர் பதவியை விட்டு இன்று விலகும் செந்தில் பாலாஜி.? அடுத்து பொன்முடி.? திமுகவில் அதிரடி மாற்றங்கள்!