உலகத்திலேயே முட்டைகளை அதிகம் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளில் டாப் 10ல இடம் பிடிச்சிருக்கு இந்தியா. அப்படிப்பட்ட நம்ம நாட்டோட முட்டைகளை வாங்க சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
சவுதி அரேபியா வெளிநாடுகளில இருந்து வரக்கூடிய கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிச்சிருக்கு. இந்தியா உட்பட 40 நாடுகளிலிருந்து இந்த இறக்குமதிகளை சவுதி தடை செஞ்சிருக்கு. இந்த 40 நாடுகளுக்கு முழு தடை விதிச்சதோடு மட்டுமில்லாமல் மேலும் 16 நாடுகளுக்கு பகுதி தடை விதிக்கப்பட்டிருக்கு. அந்த பகுதி தடை விதிக்கப்பட்ட நாடுகளில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் அல்லது நகரங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் கோழி மற்றும் முட்டை இறக்குமதி செய்ய முடியாது. ஆனால் அதே நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து ஏற்றுமதி தொடரலாம்.
இந்தியா மற்றும் சில நாடுகளுக்கு சவுதி முழு தடை உத்தரவு போட்டுள்ளது. அதனால் நாம் முட்டையையோ இல்ல இறைச்சிக்காக பயன்படுத்தப்படுற பறவைகளையோ அனுப்ப முடியாது. இந்தியாவோட சேர்த்து யார் யாரெல்லாம் அந்த தடைக்குள்ள வருகிறார்கள் என்றால், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், ஜெர்மனி, இந்தோனேசியா, ஈரான், போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவினா, பல்கேரியா, வங்கதேசம், தைவான், ஜிபௌட்டி, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈராக், கானா, பாலஸ்தீனம், வியட்னாம், கம்போடியா, கஜகஸ்தான், கேமரூன், தென்கொரியா, வடகொரியா, லாவூஸ், லிபியா, மியான்மார், பிரிட்டன், எகிப்த், மெக்சிிகோ மங்கோலியா நேபாளம் நைசர் நைஜீரியா ஹாங்காங் ஜப்பான் பெர்கினோபாசோ சூடான் சர்பியா ஸ்லோவேனியா கோர்ட்டிவார் மற்றும் மோன்டனிகரோ இந்த எல்லா நாடுகளில் இருந்தும் எந்த அளவிலையும் கோழி அல்லது முட்டையை சவுதி அரேபியா இறக்குமதி செய்யாது பறவை காய்ச்சல் அச்சத்தால பறவை காய்ச்சல் அப்படினா என்ன கோழிகள் வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பறவைகளை தாக்கக்கூடிய இன்பளுவன்சா வைரஸ்களால ஏற்படக்கூடிய தொற்று பண்ணைகளால் வளரக்கூடிய பறவைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?
நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் துபாய், ஓமன், பஹ்ரைன்,மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. தற்போது ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 75 சதவீதம் வரை குறைந்துள்ளது. 10 லட்சம் முட்டைகள் மற்றுமே தற்போது ஏற்றுமதி ஆகி வருகிறது. பிற நாடுகளுக்கு மான் முட்டை ஏற்றுமதி வெகுவாக குறைந்து விட்டது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!