இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், கட்சிகளிடையே தீவிரமான ஆயத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த அறிவிப்பை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். தமிழ்நாட்டில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இவர்களுக்காக ஏராளமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல் அறிவிப்புடன், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!
காபந்து அரசு விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதன் மூலம் புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ, தொடங்கி வைக்கவோ முடியாது. அரசு வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களைத் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது. புதிய அரசு பதவியேற்கும் வரை அன்றாடப் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும். வாக்காளர்களைக் கவரும் எந்தப் புதிய செயலையும் செய்ய முடியாது.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!