சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மோதலில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுகவினர் மீது வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வந்தனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிந்தது. தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வந்தது.

பல தொகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பங்கேற்று வந்தனர். அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இதையும் படிங்க: விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு..? வெடிக்கும் பிரச்சனை..!
இந்த நிலையில், வாணியம்பாடி தொகுதி வள்ளிப்பட்டு வாக்கு சாவடியில் மோதலில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுகவினரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது மோதலில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுகவினர் 19 பேர் மீது வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் ஒரு சில வாக்குச்சாவடிகளை இதுபோன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 194 வாக்குச்சாவடி மையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் உடன் சென்ற திமுகவினருக்கும் அப்பகுதியில் இருந்த அதிமுக முன்னாள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உடன் இருந்த அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவை சேர்ந்த 11 பேர் மீதும், திமுகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!