கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் பெயரை கூட சொல்லாமல் இருந்ததும் அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தேச பொருளாக மாறிய நிலையில், சட்டசபையிலும் இருவருக்கும் இடையே சமூக நிலை ஏற்படவில்லை. செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்பதை அவரிடமே கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தது இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருவதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். தலைமைக்கு அவர் கெடு விதித்த நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
இதையும் படிங்க: அண்ணன் செங்கோட்டையன்... அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்...!
ஆனால் தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சி தொடரும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். நேற்று தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை என்பதால் அது குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். நன்றி வணக்கம் எனக் கூறி அங்கிருந்து நழுவி சென்றார்.
இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையனுக்கு ‘தலைமை’ பொறுப்பு... தவெகவில் கால் வைத்ததுமே 2 அதிமுக்கிய பதவிகளை அள்ளிக்கொடுத்த விஜய்...!