திருவண்ணாமலையில் சகோதரி கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது திமுக அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பரபரக்கும் அரசியல் களம்… சத்தமின்றி சம்பவம் செய்த இபிஎஸ்…!

பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது என்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்றும் சாடினார். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: உங்க வீடியோ தான் ஸ்டாலின் DOUBT- ஆ இருக்கு... சிபிஐ விசாரணை வேண்டும்... பந்தாடிய இபிஎஸ்...!