அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான விழா ஒரு கூட்ட அரங்கில் நடைபெற்ற நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு மின்சாரம் மீண்டும் சீரானது.
மின்வெட்டு ஏற்பட்டதையடுத்து, இதனை எடப்பாடி பழனிசாமி தனது பேச்சின்போதே விமர்சித்தார். “நான் பேசும்போதே மின்வெட்டு ஏற்படுகிறது. இதுதான் தமிழக ஆட்சியின் லட்சணம்” என்று அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் இபிஎஸ் ஆவேசம்.. பொறுமையா பேசுங்க.. சபாநாயகர் அறிவுறுத்தல்.!
மேலும், அதிமுக ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதோ, இப்போது நம்முடைய கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது. இதுதான் இந்த ஆட்சியுடைய லட்சணம் என சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்கள் கனவு நினைவாக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து 4000 மாணவர்கள் மருத்துவம் படித்துள்ளனர். நானும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால், மாணவர்கள் மனக்குமுறலை நீக்கினேன். விவசாய கடன் 12,000 கோடி கடன் தள்ளுபடி செய்தேன்.
ஓசூரில் சர்வதேச மலர் அங்காடி கொண்டு வந்தோம். திமுக அதை பூட்டி வைத்துள்ளது. இந்த அரசாவது திறக்கும் என்று தெரியவில்லை. விவசாயம், தொழில் வளத்திற்கு முன்னுரிமை கொடுத்தது அதிமுக.
இன்றைக்கு தவெக ஆட்சி அமைத்தது விபத்து. இதை யாரும் எதிர்பார்க்கல. மூன் மாதத்தில் 28,000 கோடி கடன். இந்த ஆட்சியும் 1.25 இலட்சம் கோடி கடன் பெற்றுள்ளுது. 5 ஆண்டுகள் ஆட்சி இருக்காது. ஒருவேளை ஆட்சி இருந்தால், இவர்களும் கடன் வாங்கி தான் வைப்பார்கள். இதையெல்லாம் மக்கள் தான் கடன் கட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் வாங்கும் கடனை மக்கள் தான் அடைக்க வேண்டும்.
நான் முதல்வராக இருந்த 4 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். வண்டல் மண் எடுப்பவர்களை அமைச்சர் மாஃபியா என பேசுகிறார். மாஃபியாவை எல்லாம் கட்டிபிடிப்பதில்லை. விவசாயிகளை கொச்சை படுத்துகிறார்கள். தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சராகிட்டாங்க. தத்தளிக்கிறது தமிழகம். மூன்று பேர் மட்டும் தான் பேசுகிறார்கள். கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். இப்படி தான் 100 நாள் ஆட்சி இருக்கிறது.
ஜனநாயகன் படம் அப்படி இப்படி இருக்கும் என ரீல்ஸ் போட்டாங்க. ஆனால் ஒரே வாரத்தில் காத்து வாங்குது. அப்படித்தான் இந்த 100 நாள் ஆட்சியும். பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் போடுறாங்க. மக்களுக்கு என்ன கொடுத்தீங்க. ஒன்றும் இல்லை. ரீவ்ஸ் தான் போடுறாங்க.
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பேசுவதில்லை. ஆளுங்கட்சி-எதிர்கட்சி சொந்த பிரச்சினை தான் பேசுகிறார்கள். மக்கள் பிரச்சினை பேசுவது அதிமுக தான். இன்றைக்கு தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதோ, இப்போது நம்முடைய கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது. இதுதான் இந்த ஆட்சியுடைய லட்சணம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: என்றென்றும் கேப்டன்..! "மக்கள் மீதான பேரன்பு"..! ஸ்டாலின், EPS விஜயகாந்திற்கு புகழாரம்..!!