இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை அட்டூழியம்! 14 தமிழக மீனவர்கள் கைது.. படகுகள் பறிமுதல்..!

இலங்கை கடற்படை நடவடிக்கையை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்தனர். சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாது கடந்த 13 ஆம் தேதி போராட்டமும், கடந்த 15ஆம் தேதி உண்ணாவிரத போராட்டமும் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர். இதன் காரணமாக இன்று காலை முதலே ராமேஸ்வரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் அராஜகத்தை கண்டித்தும் மீனவர்கள் போராடி வருகின்றனர். இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்பது மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா 3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தில் அமர்ந்தும் மீனவர்கள் முழக்கங்களை எழுப்பி போராடி வருகின்றனர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அப்பாவி மீனவர்களை தண்டிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
இதையும் படிங்க: மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம்! முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிப்பு... தீவிர கண்காணிப்பு..!