தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமன முறையில் உறுப்பினர்கள் ஆக்குவதற்கான சட்ட முன்வடிவ தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்தார். இதன் மூலமாக ஒரு 13,988 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சியில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்கள் என்பதும் தமிழக முதலமைச்சருடைய தகவலாக இருந்தது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாற்றுத்தினாளிகளை நியமன முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

இதன் காரணமாக அவர்கள் போட்டியிடாமலேயே நியமனம் செய்யப்படக்கூடிய நடவடிக்கையாகவும் அவருடைய குரல்களும் அதாவது மாற்றுத்திறனாளிகளுடைய குரல்களும் உள்ளாட்சி அமைப்புகளில் எதிரொலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 13, 988 மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்யப்படுவதற்காக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆளுநர் ஆர்என் ரவி அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர். மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத்திறனாளிகளும் வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இதையும் படிங்க: திருக்குறள் ஒரு ஆன்மீகப் புத்தகம்... திருவள்ளுவரை விடாமல் விரட்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி...!