சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர வைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயத்துன் நிஷா என்ற பெண், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மசூதித் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார். அதே வீட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பகபதி மாஜி ஆகியோரும் தங்கியிருந்தனர்.
ஆகஸ்ட் தொடக்கத்தில் சென்னையிலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ராவை அடைந்தபோது, பொதுப் பெட்டியில் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் ரயில்வே ஊழியர்கள் அதைத் திறந்து பார்த்தனர். உள்ளே தலை மற்றும் கைகள் இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கவர்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் உடனடியாக போலீசாரின் கவனத்தை ஈர்த்தது.

ஆக்ரா ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அதே மாதிரியான சிவப்பு சூட்கேஸை எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறியது தெரியவந்தது. அவர்கள் சூட்கேஸை ரயிலில் விட்டுவிட்டு வேறொரு ரயிலில் கூடுவாஞ்சேரிக்குச் சென்றிருந்தனர். இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு தமிழக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதையும் படிங்க: ஒடிசா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சூட்கேஸில் உடல் பாகங்கள்! கூடுவாஞ்சேரி கொலையில் திடுக் திருப்பம்!
கூடுவாஞ்சேரி வீட்டை அடையாளம் கண்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு சமையலறையில் பிரியாணி சமைக்கப் பயன்படும் பெரிய அண்டா ஒன்று இருந்தது. அதில் ரத்தக் கறைகளும், மைதா மாவும், காய்கறிகளும் கலந்த நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாணிக் உத்தின் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மணிப்பூரில் தலைமறைவாக இருந்த மாணிக்கை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கைதாகி உள்ள மாணிக் புதின் லஸ்கரின் காதலியை போலீசார் தேடி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு தொடர்பான கொலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "அடித்தே கொலை"..! சபரிவர்மன் கொலை வழக்கு... சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!