தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று குட்கா முறைகேடு வழக்கு. இது 2016-17 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் பெரும் ஊழல் சம்பவம். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரி அமைச்சர் பி.வி. ரமணா, முன்னாள் டி.ஜி.பிக்கள் டி.கே. ராஜேந்திரன், எஸ். ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தனியார் நபர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரித்து, இறக்குமதி செய்து, விற்பனை செய்ய அனுமதி அளித்து பெரும் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டுகிறது.
வழக்கின் தொடக்கம்2017 ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகள், குடோன்கள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் டைரிகளில் பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. சுமார் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் பரிமாற்றம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாயின. இதில் முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை, வணிக வரி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றன.
இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுகவைச் சேர்ந்த ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 2018 ஏப்ரல் 26 அன்று உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இது அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.
இதையும் படிங்க: வழக்குகளுக்கு பயந்து தவெகவுக்கு தாவலா?... விஜயபாஸ்கர்கள் மேல் உள்ள வழக்குகள் என்னென்ன?

சிபிஐ விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகைசிபிஐ விசாரணை தொடங்கிய பிறகு 2018 செப்டம்பரில் விஜயபாஸ்கர், ராஜேந்திரன் உள்ளிட்டோரின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2022 ஜூலையில் தமிழக அரசு சிபிஐக்கு விசாரணைக்கு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து 2022 நவம்பரில் 21 பேர் மீது முதல் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2024 செப்டம்பரில் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள ஆவணங்கள் குறித்து ஆட்சேபணை எழுப்பப்பட்டது. நீதிமன்றம் சிபிஐயிடம் விளக்கம் கோரியது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஹை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தடையை மீறி துர்கா பொருட்கள் விற்க அனுமதித்தது தொடர்பாக 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் 12 வாரங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!