உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா தன்யா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள் மோகித் வயது மற்றும் பிரதீப். இருவரும் இவர்கள் டாக்சி டிரைவர்களாக இருக்கின்றனர்.
பக்கத்து வீட்டினர் என்பதால் சிறுமி அவர்களிடம் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமி அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். மோகித் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் சிறுமியிடம் பேச்சு கொடுத்த நிலையில், சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

ஹால்ட்வானியில் உள்ள கத்கோடம் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் சென்றபோது சிறுமியை கட்டாயமாக மது குடிக்க வைத்து பின்னர் காரிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தேடிய நிலையில் பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஓர் பயங்கரம்... பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை வன்கொடுமை செய்த கொடூரம்..!!
போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில், கத்தோடம் சாலை ஓரத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். ஒரு சிறுமி மயங்கிய நிலையில், அரைகுறை ஆடையுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தபோது சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிறகு மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுத நிலையில், டாக்ஸி டிரைவர்கள் மோகித் மற்றும் பிரதீப் ஆகிய இருவரையும் போக்சோ கைது செய்தனர்.
இதையும் படிங்க: தி.மலையில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை... பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்..!!