மத்திய அமெரிக்க நாடு ஹோண்டுராஸ். இங்குள்ள சுற்றுலாத்தலமான ரோட்டான் தீவு பவளப்பாறைக்களுக்கு பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இத்தகைய ரோட்டான் தீவில் இருந்து குட்டி விமானம் ஒன்று நேற்று இரவு அங்குள்ள லா செய்பா விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. ஹோண்டுரான் விமான நிறுவனமான லான்சாவால் இயக்கப்படும்
இந்த ஜெட்ஸ்ட்ரீம் விமானத்தில் 3 பணியாளர்கள் மற்றும் 14 பயணிகள் பயணித்துள்ளனர். இதில் கரிஃபுனா இசைக்கலைஞர் ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோவும் ஒருவர். இந்த விமானம் நேற்றிரவு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ரோட்டான் தீவின் கடற்கரையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கடலில் விழுந்து நொறுங்கியது விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விமான விபத்தில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோ உயிரிழந்தார். மேலும் ஒரு அமெரிக்கர், ஒரு பிரெஞ்சுக்காரர், இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதம் 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை.. மாநிலங்களவையில் வலியுறுத்தல்..!

விபத்து நடந்த இடத்தை அணுகுவது கடினமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பவளப்பாறைகள் நிறைந்த இடங்களில் நீந்துவது மிகக்கடினமாக இருந்தது. ஏனெனில் 30 மீட்டர் (98 அடி) பாறைகள் அப்பகுதியில் இருந்தன. மேலும் அப்பகுதியில் நடந்து செல்வதோ அல்லது நீந்திக் கொண்டு நீங்கள் அங்கு செல்ல முடியாது என்றும் அவர்கள் கூறினார். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விபத்து குறித்து விமான நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ரோட்டன் தீயணைப்புத் தலைவர் பிராங்க்ளின் போர்ஜாஸ் தெரிவித்ததாவது ; ஹோண்டுரான் விமான நிறுவனமான லான்சாவால் இயக்கப்படும் ஜெட்ஸ்ட்ரீம் விமானம் 14 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்றது.விமானம் ஹோண்டுரான் நிலப்பரப்பில் உள்ள லா சீபா விமான நிலையத்திற்கு பறக்க திட்டமிடப்பட்டிருந்தது.
திடீரென கடலில் விழுந்து விமானம் நொறுங்கியது. தீவின் கடற்கரையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகளில் ஒரு அமெரிக்க நாட்டவர், ஒரு பிரெஞ்சு நாட்டவர் மற்றும் இரண்டு சிறார்களும் அடங்குவர். இறந்தவர்களில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோவும் ஒருவர் என கூறினார்.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விமான நிறுவனமும் உடனடியாக பதிலளிக்கவில்லை. உயிர் பிழைத்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரத்தில் விமானம் தீவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹோண்டுரான் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் உள்ள விரிகுடா தீவுகளில் மிகப்பெரியது ரோட்டன். இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும், மேலும் அதன் துடிப்பான பவளப்பாறைகளுக்குப் பெயர் பெற்றது என்றார்.

இதற்கு முன் இதேபோல் ஒரு விமான விபத்து ரோட்டான் தீவில் நடந்துள்ளது. கடந்த 2019ல் ரோட்டான் தீவில் இருந்து குட்டி விமானம் ஒன்று அங்குள்ள ட்ருஜில்லோ நகருக்கு புறப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. அடுத்த சில வினாடிகளில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியாகி விட்டனர். தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பலியான சுற்றுலாப்பயணிகளில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் ஜோஸ் டொமிங்கோ தெரிவித்தார். 5-வது சுற்றுலாப்பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரிய வரவில்லை. இந்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது..
இதையும் படிங்க: அடங்காத அட்டூழியம்... ஆபாசமாக பெண்ணை திட்டிய திமுக எக்ஸ் துணைத் தலைவர்: பாய்ந்தது வழக்கு..!