சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி அதனால் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர் பலர் செல்போனிலும் சமூக வலைத்தளங்களிலும் மூழ்கி விடுகின்றனர். குறிப்பாக இளம் பெண்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. அதில் நடனமாடியும் பாட்டுப்பாடியும் ரீல்ஸ் போடுவதும் அதற்கு அதிக லைக்குகள் வாங்குவதும் என அதிக நேரத்தை அதில் செலவிடுகின்றனர்.

இது ஒரு புறம் என்றால் மறுபுறம் முன் பின் தெரியாத நபர்களிடம் பழகி பல சிக்கலிலும் மாட்டி வருகின்றனர். முன்னதாக அரசு சார்பில் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி பேசியிருக்கிறார். அந்த விவசாயியின் மகள் மல்லூர் அருகே இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும், அந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டுவதாகவும், அவரை தனிமையில் இருக்க வேண்டும் என அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் கைதான கேரள ஆசிரியர்... புகாரளித்த மாணவி கணவனுடன் செய்த செயலால் அதிர்ச்சி!!

இதை அடுத்து இந்த தகவல் உள்ளூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் சிறுமி தங்கி இருந்த வீட்டை சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சுற்றித்திரிந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பதும், மற்றொருவர் எருக்கஞ்சேரி இந்திரா நகரை சேர்ந்த முகமது அலி என்பதும் தெரிய வந்தது. முகமது அலி மெக்கானிக்காகவும், கிஷோர் லேப் டெக்னீசியன் ஆகவும் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்வாண வீடியோக்களை வைத்து மாணவியை மிரட்டியதை ஒப்பு கொண்டுள்ளனர்.

இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவியுடன் கிஷோர் பழகி உள்ளார். முதலில் காதலிப்பதாக கூறி அவரிடம் நீண்ட நாட்களாக பேசி வந்துள்ளார். தொடர்ந்து மாணவியிடம் நைசாக பேசி அவரது ஆபாச புகைப்படங்களை பெற்றிருக்கிறார். ஒருநாள் வீடியோ காலில் உடைகள் இன்றி வரவேண்டும் என்றதும் முதலில் மாணவி மறுத்து இருக்கிறார். அப்போது நாம் காதலர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என பேசி மாணவியை உடைகள் இன்றி வீடியோ காலில் வர வைத்துள்ளார். அப்போது அதனை ரெக்கார்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நண்பன் முகமது அலியுடன் சேலம் வந்த கிஷோர் மாணவியை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அதற்கு மாணவி மறுத்த நிலையில் ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இதை அடுத்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூற அவர் குழந்தைகள் உதவி எண்ணை அழைத்து புகார் தந்துள்ளனர். இதை அடுத்தே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறி இருக்கின்றனர். தற்போது அவர்களது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வேறு யாரையாவது அவர்கள் இதுபோல தொல்லை செய்திருக்கிறார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதலால் நேர்ந்த சோகம்... பெங்களூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!