மத்திய அரசு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மிக முக்கியமான திட்டமாகும். இத்திட்டம் 2019 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 2024 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு தனித்தனி குழாய் இணைப்பு வழங்குவது இலக்காக அமைக்கப்பட்டது. ஆனால், செயல்படுத்தலில் ஏற்பட்ட சில சவால்கள், தொழில்நுட்ப சிக்கல்கள், ஒப்பந்ததாரர் தொடர்பான பிரச்சினைகள், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைப்பு குறைபாடுகள் போன்ற காரணங்களால் 100 சதவீத இலக்கை 2024-இல் அடைவது சாத்தியமாகவில்லை.

மீதமுள்ள வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்குவதற்கும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கட்டமைப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்கும், நீண்டகால நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில், மாநில அரசுகளுடன் தனித்தனி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.
இதையும் படிங்க: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??
இதன்மூலம் தரமான கட்டமைப்பு, நீண்டகால பயன்பாடு மற்றும் மக்களின் பங்கேற்பு ஆகியவை உறுதி செய்யப்படும். கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், நீர்வள மேலாண்மையை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இத்திட்டம் வெளிப்படுத்துகிறது. ஜல்ஜீவன் திட்டத்தை வரும் 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்திற்கான மொத்த நிதியை 8.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் கப்பல் மீது அட்டாக்..!! இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??