தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பில் இருப்பவர்களே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக எதிர் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் இதற்கிடையில் பெண்ணிடம் அத்துமீறிய தவெக இடையில்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக வெற்றி கழகம் அறிவித்தது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்குச் சான்று என விமர்சனம் செய்துள்ளார்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், தனது தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த 27 வயது இளம்பெண்ணிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோர் இரட்டை அர்த்த வசனங்களுடன் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குப் பலவீனமடைந்துள்ளது என்பதற்கு, பகல் நேரத்திலேயே பேருந்து நிலையம் போன்ற பொதுவெளியில் பெண்ணுக்கு நேர்ந்த இந்த அவமரியாதையே தெளிவான சான்றாகும் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ஆளுநர் உரை... சட்டப்பேரவையில் புதிய அத்தியாயம்..!
சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளியான பின்பு, அந்த நிர்வாகியைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தவெக தலைமை அறிவித்துள்ளது என்பதையும் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டி இருக்கிறார். வெறும் நீக்கம் மட்டுமே இதற்குப் போதுமான தீர்வாகாது என்று தெரிவித்துள்ள அவர், கொள்கை முழக்கங்களை மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களது கட்சித் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பெண்களை மதிக்கும் அடிப்படைப் பண்பையும் ஒழுக்கத்தையும் முதல்வர் விஜய் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும்!! திமுக தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை! ஸ்டாலின் ஷாக்!