மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கடந்த ஆண்டு திருத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்கள். இப்படி ஏராளமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தாலும், பென்ஷன் இன்றுவரை பலருக்கும் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த ஓய்வூதியத்தை நம்பியே பல குடும்பங்கள் உள்ள நிலையில், பல முதியோர் பணம் கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிகிறது.

அப்படியே கிடைத்தாலும், பெரும்பாலானோருக்கு தாமதமாக கிடைப்பதாகவும் புகார் எழுந்தது. ஓய்வூதியம் தொடர்பான புகார்களை சரிசெய்ய பென்சன் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தாலும், பல நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். 13-வது அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் டெல்லியில் நடைபெற்ற முகாமில் மத்திய அமைச்சர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
இதையும் படிங்க: மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!

அப்போது பேசிய அவர், ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம். பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களை மையமாக வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரிக்கு இணங்க, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியதாரர்களின் கௌரவத்தை உறுதிசெய்ய சிறந்த நடவடிக்கை தேவை. 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் இதுவரை நடைபெற்ற 12 பென்சன் குறைதீர்ப்பு முகாம்களில் 25,416 கோரிக்கைகள் பெறப்பட்டு, 18,157 கோரிக்கைகளுக்கு குறிப்பாக 71 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஓய்வூதியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்பதால் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்காக அலைக்கழிக்கப்படக் கூடாது. ஓய்வூதியதாரர்களை அரசு துறைகளும், அலுவலர்களும் பயனாளிகளாகவும் நடத்தக்கூடாது. நிர்வாக குடும்பத்தின் மதிப்புமிகு உறுப்பினர்களாக நடத்த வேண்டும். நாட்டின் ஓய்வூதியதாரர்களின் கௌரவத்தை உறுதிசெய்ய நிர்வாக கூருணர்வும், திறனும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதெல்லாம் கருத்து சுதந்திரத்தில் வராது... ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!!