முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இரண்டு மாத காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வழக்கமாக நெல் நர்சரி அமைத்து நாற்றுக்கள் நடவு செய்யும் முறையில் இருந்து மாறி நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
இரண்டு மாதம் கழித்து தற்பொழுது விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளதால் அறுவடை சமயத்தில் பருவ மழையில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் மேலும் நேரடி விதைப்பு மூலம் மகசூல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீரினை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாய பணிகள் நடைபெறுகின்றது.
இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!
கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் விவசாயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியாறு அணியிலிருந்து ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சரிவர செய்யாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயராத காரணத்தினால் முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் இரண்டு மாதம் கழித்து ஆகஸ்ட் மாதம் 8 தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இரண்டு மாதங்கள் கழித்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்பொழுது தான் கம்பளத்தாக்கு பகுதியில் முதல் போக விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் தற்பொழுது நெல் நடவுகள் நடப்பட்டு இரண்டு மூன்று களைகள் எடுக்கப்பட்டு பூச்சி மருந்துகள் அடித்து பயிர் நன்றாக செழிப்பாக வளர்ந்து இருக்கும் நிலையில் தற்பொழுது விவசாயி பணிகளை தொடங்கியுள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயிகள் வழக்கம்போல் முதல் போக நெல் சாகுபடி பணிகளை செய்யாமல் மாறி உள்ளனர் .
அதாவது ஜூன் மாதம் தண்ணீர் திறந்தவுடன் வயல்களை உழுது நாற்றங்கால் அமைத்து நாற்றுக்கள் வளர்த்து பின்னர் வயல்களை உழுது, சேற்று உழவு செய்து, பரம்படித்து 21 நாட்கள் வளர்ந்த நாற்றுக்களை பிடுங்கி ஆட்கள் மூலம் நடவு செய்வார்கள் இதுதான் கம்பம் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பணிகளாக பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகின்றது .
ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் இரண்டு மாதம் கழித்து திறக்கப்பட்டதால் கூடலூர் கம்பம் பகுதியில் விவசாயிகள் தற்பொழுது வாயில்களை உழவு செய்து நெல் நேரடி விதைக்க தொடங்கியுள்ளனர்.
நேரடி விதைப்பால் நெற்பயிர்கள் அங்கொன்று இங்கொன்றுமாகவும் குவியலாகவும் முளைத்துள்ளதாகவும் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை உருவாகும்.
மேலும் இரண்டு மாதம் கடந்து விவசாய பணிகள் தொடங்கி உள்ளதால் அறுவடை சமயத்தில் பருவ மழையில் மாட்டிக் கொள்ளும் நிலை உருவாகும் என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.
அதனால் இந்த வருடம் முதல் போக விவசாயம் கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!