2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்ற புதிய நீதிக் கட்சி (ஏ.சி. சண்முகம் தலைமை) சார்பில் மதுரை மத்திய தொகுதிக்கு திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது. சுந்தர் சி, நடிகை குஷ்புவின் கணவர் என்பதாலும், சினிமா துறையில் பிரபலமானவராக இருப்பதாலும் இந்த நியமனம் உடனடியாக கவனத்தை ஈர்த்தது. மதுரை மத்திய தொகுதி தற்போது திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பி.டி.ஆர்) பிரதிநிதித்துவப்படுத்தும் இடம்.

இதன் காரணமாக இந்தப் போட்டி நேரடி மோதலாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!
அப்போது பேசிய அவர், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் இந்த தொகுதிக்கு (மதுரை மத்தி) சம்பந்தமே இல்லாத வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் தெரிந்த வேட்பாளராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் கூட ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூறியுள்ளார். சுந்தர் சி-யை மறைமுகமாக சுட்டிக்காட்டி திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..! - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!