• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக - கர்நாடகா எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... களத்தில் இறங்கிய போலீஸ் படை- நடப்பது என்ன?

    கர்நாடக அரசு மேகதாதுவில் உடனடியாக அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று பந்த்
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 11:58:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka tamilnadu cauvery dispute

    தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயிகள் மற்றும் அரசு சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதைத் தொடர்ந்து, இன்று கர்நாடக அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், கர்நாடக அரசு மேகதாதுவில் உடனடியாக அணை கட்ட வேண்டும் என்றும், பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறி, இன்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புகளையும் அழைத்து பந்த் என அறிவித்திருந்தார்.

    தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் எந்தவொரு போக்குவரத்தும் நடைபெறாது என்றும், கடைகள் திறக்கப்படாது என்றும், தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு எந்தவொரு வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

    தற்போது நாம் நின்று கொண்டிருக்கும் இடம் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி. கர்நாடக வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்த அந்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், பெரும்பான்மையான சங்கங்கள், அதாவது போக்குவரத்து சங்கங்கள், கடை உரிமையாளர்கள் சங்கங்கள், பள்ளிகள் மற்றும் எந்தக் கூட்டமைப்புச் சங்கங்களும் அவருக்கு ஆதரவு அளிக்காத நிலையில், கர்நாடக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த பந்த் இன்று நடைபெற்றிருந்தாலும் கூட, மாநில எல்லையில் உள்ள சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, தற்போது இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தைப் பொறுத்தவரை, இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல போக்குவரத்து இருந்து வருகிறது. காலை முதலே வழக்கமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய கர்நாடக பேருந்துகளும் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவிற்கு வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் தற்போது இயல்பாகவே கர்நாடகாவிற்குச் சென்று வருகின்றன.

    கர்நாடக அரசு, வாட்டாள் நாகராஜ் பந்த் அறிவித்த நிலையில், அவரைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் எவ்விதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்பதற்காக, கர்நாடக மாநில எல்லையில் கர்நாடக போலீசாரும், தமிழக எல்லையில் தமிழக போலீசாரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு, தொடர்ந்து இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து, இந்தப் பகுதியில் காலை 30-க்கும் மேற்பட்ட கர்நாடக அமைப்பினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக கர்நாடக போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது போக்குவரத்து வழக்கம்போல் இயல்பாக நடைபெற்று வருகிறது.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைப்புகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்று நடைபெற்ற இந்த பந்த்தால் பெரும்பாலான பொதுமக்களுக்கும், போக்குவரத்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் எந்தவொரு இடையூறும் இல்லாமல், போக்குவரத்து வழக்கம்போலவே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    மேலும் படிங்க
    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    குற்றம்
    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    அரசியல்
    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    அரசியல்
    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    இந்தியா
    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்

    செய்திகள்

    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    குற்றம்
    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    அரசியல்
    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    அரசியல்
    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    இந்தியா
    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share