கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடுக்கி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்திலிருந்து மீட்புக் குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மையத்திலிருந்து ஒன்பது குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வயநாட்டைப் புரட்டிய நிலச்சரிவு..! 7 பேரை காணவில்லை... கேரள முதல்வர் சதீசன் பரபரப்பு பேட்டி..!
இதற்கிடையில், இடுக்கி மாவட்டம் ஆடூர்மலை பகுதியில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கேரள காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கோட்டயம் மாவட்டத்தின் இரடுமலை பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், கேரளாவின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!