தமிழக அரசியலில் சமீபகாலமாக ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் கூட்டணி அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்துள்ளது.
தேமுதிகவை 2005ஆம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அவரது சகோதரர் எல்.கே. சுதீஷ் பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர். கடந்த காலங்களில் தேமுதிக தனித்து அல்லது வேறு கூட்டணிகளுடன் தேர்தல்களில் போட்டியிட்டபோதும், நாடாளுமன்றம் அல்லது மாநிலங்களவையில் எம்.பி. இடத்தைப் பெற முடியவில்லை.

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது தேமுதிகவுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது.கூட்டணி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, தேமுதிகவுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற உறுதிமொழி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இனி நாங்க தான்... ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி..! அன்புமணி திட்டவட்டம்..!!
தேமுதிக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக கட்சியின் பொருளாளரும் தனது சகோதரருமான எல்.கே. சுதீஷ் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி எல். கே. சுதீஷ் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கிடையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு குடும்பத்துடன் சென்று வேட்பு மனு வைத்து பிராத்தனை செய்தார்.
இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல்..!! அதிமுக சார்பில் அன்புமணி, தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்..!!