மதுரை ஆணையூர் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் முட்பதற்குள் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி அது ஆணவ படுகொலையா என்ற அடிப்படையில கூடல்புதூர் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாநகர் கூட நகர் வானவில் திருப்பகுதியை சேர்ந்த யோகலட்சுமி கருப்பசாமி தம்பதியின் மகனான தமிழ்ச்செல்வன் இவர் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில 14 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தந்தை வெளியூரில் உள்ளதால் தாயார் யோகலட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வன் அவரது சகோதரியாகிய மூன்று பேருமாக தனியாக வசித்து வந்தனர். நேற்று முன் தினம் விடுமுறை நாள் என்பதால் காலையில் கிரிக்கெட் விளையாட செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு மாணவன் சென்றிருக்கிறார். இந்த நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில சிறுவனுடைய தாயார் மற்றும் உறவினர்கள் தேடிய போது கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தனர்.
இந்த நிலையில்தான் மதுரை ஆணையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே அப்துல் கலாம் தெரு பகுதியில ஒரு முட்பதருக்குள்ள காயமுடல் நேற்று சடலமாக தமிழ் செல்வன் மீட்கப்பட்டிருந்தார். சிறுவன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், ஆணவக்கொலையாக இருக்கலாம் என்றும் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியூட்டியுள்ளது.
இதையும் படிங்க: மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!
சிறுவனின் வயிற்றில் வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்தாகவும், மார்பில் கடித்ததற்கான அடையாளம் மற்றும் சிறுவனின் கைகள், முட்டியில் சிராய்ப்பு காயங்கள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல். சிறுவன் ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தமிழ்செல்வன் மரணத்தில் துரைபாண்டி என்பவருக்கு கட்டாயம் தொடர்பு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் தங்களுக்கு ஆழமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “காலையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, துரைபாண்டி தொடர்பாக எங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை காவல்துறையிடம் தெளிவாக தெரிவித்தோம். ஆனால், எங்களுடைய கருத்துக்கு காவல்துறையினர் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.
அதற்கு பதிலாக, காவல்துறையினர் தங்களுடைய கருத்தை எங்களிடம் ஏற்றுக்கொள்ள வைப்பதிலேயே தீவிரமாக இருந்தனர். சிசிடிவி காட்சிகளை காண்பித்து, இந்த ஆறு பேர்தான் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஒரு சிறுவன் உயிரிழந்துவிட்டான் என்றும், மீதமுள்ள ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், ஏற்கனவே எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, மேட்டுத் தெருவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தமிழ்செல்வனை தூக்கிச் சென்று போட்டதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்திருக்கும்போது, காவல்துறையினருக்கு இது தெரியாதா என்ற கேள்வி எழுகிறது.
இந்த வழக்குக்காக ஒரு பெரிய காவல்துறை குழு பணியாற்றி வருவதாகக் கூறுகின்றனர். அப்படியிருக்கும்போது, இந்தத் தகவல் அவர்களுக்குத் தெரியாதது எப்படி? ஏன் சில தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்ற சந்தேகம்தான் எங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ்செல்வனை தூக்கிச் சென்றபோது, அவர் உடலில் எந்த ஆடையும் இல்லாமல் வெறும் டிரவுசர் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. அவர் அணிந்திருந்த செருப்பு, பேண்ட், சட்டை உள்ளிட்டவை எதுவும் இல்லை.
நாங்கள் உடலை வாங்க மறுத்த பிறகுதான், காவல்துறையினர் இந்த சிசிடிவி காட்சிகளை எங்களிடம் காண்பித்தனர். நேற்றுவரை இந்தக் காட்சிகளை வைத்து எங்களை சமாதானப்படுத்தி உடலைப் பெற்றுக்கொள்ளச் செய்வதுதான் காவல்துறையின் முயற்சியாக இருந்தது. ஆனால், நாங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.
உடலை வாங்க மறுத்த பிறகுதான் இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பான விசாரணையும், மேலும் சில இளைஞர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் பல்வேறு தகவல்கள் எங்களுக்குத் தெரியவந்துள்ளன.
நாங்கள் ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்பி, மறுப்பு தெரிவித்த பிறகுதான் காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கின்றனர். நேற்றே நாங்கள் உடலை வாங்கியிருந்தால், இந்தத் தகவல்கள் எதுவுமே எங்களுக்குத் தெரியாமல் போயிருக்கும்.
இன்று காலையில் நாங்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்தபோது, தேடுதல் பணிக்காக மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் மறுத்த பிறகுதான் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியானால், நாங்கள் போராடி, கேள்வி எழுப்பினால்தான் இந்த வழக்கில் நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
எங்களுக்கு ஓரளவு சட்ட அறிவு உள்ளது. அதன் அடிப்படையில், போராட்டங்கள் மூலமாக எங்களுக்கான நீதியைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். சட்ட அறிவு இல்லாமல் சாதாரண மக்கள் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் காவல்துறையை அணுகினால், அவர்களது குரல் எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படும் என்பதற்கு இந்த வழக்கே உதாரணமாக உள்ளது.
எங்களுடைய கோரிக்கைகளுக்கே இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காவல்துறை செயல்படுகிறது என்றால், சட்ட அறிவு இல்லாத சாதாரண மக்களின் நிலை என்னவாகும்?
இந்த நடவடிக்கைக்கு எங்கள் குடும்பத்தின் சார்பிலும், முற்போக்கு அமைப்புகளின் சார்பிலும் காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!