முருக பக்தர்கள் மாநாடு இன்று மதுரை மாவட்டம் அம்மா திடல், பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே தொடங்கி நடைபெற்று வருகிறது. முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, இந்து ஒற்றுமையையும், தமிழ் கலாச்சாரத்தையும், சனாதன தர்மத்தையும் பறைசாற்று வேண்டும்., மேலும், காரைக்குடி முதல் பழநி வரையிலான பாதையை மேம்படுத்தவும், திருச்செந்தூர் பக்தர்களுக்கு தனி பாதை அமைக்கவும் கோரிக்கை வைப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டில் முருகனின் ஆறு புனித தலங்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றின் மாதிரிகள் அம்மா திடலில் 20,000 சதுர அடி பரப்பளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதிரியும் 40x80 சதுர அடி அளவில், கோவில் கோபுரங்கள், தூண்கள் மற்றும் சிற்ப விவரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அடி தூள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..! அலைகடலென திரளும் பக்தர்கள்..!

முருக பக்தர்கள் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் உள்ளிட்டவைகளை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே வருகை தந்தனர்.

தற்போது, முருக பக்தர்கள் மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், தப்பாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!