2026 தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் அதிக சீட்டுகள் வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொது வெளியில் யாரும் பேசக்கூடாது, அப்படி பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைமை எச்சரித்தும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரியவில்லை. இதனால் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் சற்றே ஓயந்திருப்பதாக பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தெரிவித்த கருத்து மீண்டும் திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதுரையில் நடைபெற்ற மதிமுக சார்பில் மண்டல அளவிலான தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய வைகோ, “காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம்.உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என பேசியிருந்தார்.
உடனே இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: கதர் சட்டை கிழியும் அளவுக்கு காங்கிரஸில் பிரச்சனை… திமுக எதையும் கண்டுக்கல..!! வைகோ பேட்டி..!!!
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கா?... திமுகவிடம் எதுவும் எடுபடாது... பலமாக சிரித்த படி காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த வைகோ...!