மெத்தம்பெட்டமைன், பொதுவாக "மெத்" என்று அழைக்கப்படும் இந்த போதைப்பொருள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை அழித்து வரும் ஒரு சக்திவாய்ந்த மூளை செயல்பாட்டைத் தூண்டும் பொருளாகும். இது ஒரு செயற்கை ஊக்கமளிக்கும் மருந்து, அம்பெட்டமைனின் ஒரு வகையான தோற்றவடிவம். தனது தோற்றத்திலிருந்தே இது மனிதர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் திறன் கொண்டது.
மெத்தம்பெட்டமைன் பயன்படுத்தப்படும் முறைகள் பலவகையானவை. இது வாய் வழியாக விழுங்கப்படலாம். மூக்கு வழியாக உறிஞ்சப்படலாம். புகைப்படுத்தப்படலாம் அல்லது ஊசி மூலம் செலுத்தப்படலாம். ஊசி மூலம் செலுத்தும்போது, தாக்கம் 5-10 நிமிடங்களுக்குள் தொடங்கி, 8-24 மணி நேரம் நீடிக்கும். புகைப்படுத்தும்போது, உற்சாக உணர்வு உடனடியாக ஏற்படும். சட்டப்பூர்வமாக, ADHD சிகிச்சைக்கு 5-25 மி.கி. அளவில் தினசரி பயன்படுத்தப்படுகிறது.

இதனுடைய திருவள்ளூர் அருகே மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் எடுத்துச் சென்றதாக நைஜீரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோதனை மேற்கொண்டதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் சென்ற ஒருவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அவர் ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: வீடு புகுந்து தாக்கும் போதை ஆசாமிகள்... போலீஸ் கண்டுக்கல?.. மறியலில் குதித்த மக்கள்...!
இதையடுத்து அவரிடம் இருந்து போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து, நைஜீரியன் நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். எங்கிருந்து போதைப்பொருள் கொண்டுவரப்பட்டது, விற்பனை உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் சுமையால் நிகழ்ந்த சோகம்...! மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட தொழிலதிபர்...!