தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலிலும், அரபிக்கடலிலும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலால் சென்னை, வட தமிழகம் மற்றும் டெல்டாவில் கடுமையான தாக்கம் இருக்கு என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து வந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரண்டு ஆபத்து... இன்று முதல் வெளியானது முக்கிய எச்சரிக்கை... தாக்கு பிடிக்குமா தமிழகம்?
புயல் சின்னம் உருவாக வாய்ப்பு?
தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது. நேற்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று, மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் இரண்டு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இதனால் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை... அனாவசியமா வெளிய வராதீங்க மக்களே..!