இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி, கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் மீது ஈரான் குண்டு மழை பொழிந்துள்ளது.
இன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, முதல் தாக்குதல் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்தது . ஈரானில் மிகப்பெரிய போரைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்டிருந்தார். இதற்கு அமெரிக்க ராணுவம் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என் பெயரிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் எனக்கூறினார். இதற்காக ஈரானை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாகவும் இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானை தாக்கியதை அடுத்து மத்திய கிழக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.
இதையும் படிங்க: பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் கொடுத்த மரண அடியால் ஆடிப்போன ஈரான் ஐக்கிய அரபு நாடுகள் மீது குண்டு மழை பொழிந்து தனது கோவத்தை கட்டுப்படுத்தி வருகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் ஆகிய இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இதற்கு காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை அமைத்துள்ளதாகும்.
அபுதாபியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை அல் தஃப்ரா விமான தளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. துபாயின் ஜெபல் அலி துறைமுகம், அமெரிக்க கடற்படையின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய துறைமுகமாகும், இது அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களை தொடர்ந்து தங்க வைக்கிறது. தோஹாவில், 24 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அல் உதெய்த் விமானத் தளம் அமெரிக்க மத்திய கட்டளைப் படையின் முன்னோக்கிய தலைமையகமாகும்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா 2,000க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது, அவர்களில் சிலர் ரியாத்திற்கு தெற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தளம் பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிகள் மற்றும் டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட அமெரிக்க இராணுவ சொத்துக்களை ஆதரிக்கிறது.
பஹ்ரைன் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படை தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பொறுப்பில் வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் அடங்கும். பல அமெரிக்க கப்பல்கள் பஹ்ரைனில் தங்கள் சொந்த துறைமுகத்தைக் கொண்டுள்ளன, அவற்றில் கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்கள் மற்றும் தளவாட ஆதரவு கப்பல்கள் அடங்கும். ஜோர்டன், குவைத் மீதும் ஈரான் தனது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் துரோக ஆக்கிரமிப்பை சவுதி அரேபியா கடிமையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதல்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் "இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாக" அது கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!