தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு சூழல் அரசியல் விவாதங்களின் மையமாக மாறியுள்ள நிலையில், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தற்போதைய அமைச்சர் எஸ். கீர்த்தனா இடையே பரபரப்பான வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஆந்திர பிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டதாக டிஆர்பி ராஜா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கீர்த்தனா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த சர்ச்சை தமிழக அரசியலில் புதிய தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு எழுந்த முக்கிய விவகாரங்களில் ஒன்றாகும். முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திமுக ஆட்சியின் போது தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவர். அவர் தமிழகத்தில் பல உயர் மதிப்பு முதலீடுகளை ஈர்க்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும், ஆனால் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு சில முக்கிய திட்டங்கள் ஆந்திராவுக்கு இழக்கப்பட்டதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

குறிப்பாக ராயல் என்பீல்டு போன்ற நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்கள் அல்லது புதிய முதலீடுகள் தொடர்பான புகார்கள் இந்த விவாதத்தில் இடம் பெற்றன. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அவர் பொதுவெளியில் கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிங்க: முதல் வெளிநாட்டு பயணத்திலேயே சாதித்த அமைச்சர் கீர்த்தனா... உலக தரத்துக்கு மாறும் தூத்துக்குடி..!! புதிய ஒப்பந்தம்..!!
இந்தக் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “இந்த கேள்வியை சட்டப்பேரவையில் எழுப்பத் தயாரா? நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். எந்த நேரத்தில் தொழில் முதலீடு ஆந்திராவிற்கு சென்றது என்பதற்கு ஆதாரம் உள்ளது” என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!